ஆப்நகரம்

ஐ.எஸ் அமைப்புக்கு பணம் அனுப்ப பி.எம்.டபிள்யூ காரை விற்ற மூவருக்கு சிறை

ஐ.எஸ் அமைப்புக்கு 10 ஆயிரம் பவுண்ட் பணம் அனுப்பியதாக இங்கிலாந்தில் வசிக்கும் 3 முஸ்லீம் நபர்களை இங்கிலாந்து அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

TNN 11 Sep 2016, 1:57 am
லண்டன் : ஐ.எஸ் அமைப்புக்கு 10 ஆயிரம் பவுண்ட் பணம் அனுப்பியதாக இங்கிலாந்தில் வசிக்கும் 3 முஸ்லீம் நபர்களை இங்கிலாந்து அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
Samayam Tamil 3 british muslims jailed after selling bmw to fund isis in syria
ஐ.எஸ் அமைப்புக்கு பணம் அனுப்ப பி.எம்.டபிள்யூ காரை விற்ற மூவருக்கு சிறை


முகமது ஹூசைன் (26), முகமது ரஹ்மான் (33) ஆகியோர் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து இவர்களுடைய சகோதரன் முசாதிகுர் ரஹ்மானின் பி.எம்.டபிள்யூ கார் மற்றும் நகைகளை விற்று ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு பணம் அனுப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகமது கான் என்ற அந்த மூன்றாவது நபர் அவர்கள் கொடுத்த பணத்தை ஐ.எஸ் அமைப்புக்கு அனுப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
முகமது ஹூசைன், முகமது ரஹ்மான் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த இவர்களின் தாய் போலீஸில் தகவல் அளித்தார்.

போலீஸ் விசாரணையில் இவர்களின் சகோதரன் மசாதிகுர் தனது மனைவி ஜொஹூரா சித்திகா சிரியாவில் கர்பமாக இருப்பதாகவும், குழந்தை பிறக்க உள்ளநிலையில் பணம் தேவைப்படுவதால், காரை விற்று பணத்தை அனுப்ப் கூறியதாக தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் ஐ.எஸ் அமைப்புக்கு உதவுவதாக இவர்கள் மீது சந்தேகமடைந்த இங்கிலாந்து நீதிமன்றம் முகமது ஹூசைனுக்கு 4 வருடங்களும், முகமது ரஹ்மானுக்கு 2 வருடம் 9 மாதங்கள் சிறை தண்டனையும், முகமது கானுக்கு 18 மாதம் நீதிமன்ற காவலும் விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி