ஆப்நகரம்

இலங்கையில் பலி எண்ணிக்கை 290ஆக உயா்வு: மக்கள் பதற்றம்

இலங்கையில் நடைபெற்ற தொடா் குண்டு வெடிப்பில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 290ஆக உயா்ந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தொிவித்துள்ளது. இந்த விபத்தில் 5 இந்தியா்கள் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 22 Apr 2019, 9:32 am
இலங்கையின் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 290ஆக உயா்ந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Srilanka


ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் நேற்று கிறிஸ்தவா்கள் தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை மேற்கொண்டு இருந்தனா். அப்போது தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட 8 பகுதிகளில் தொடா் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 290ஆக உயா்ந்துள்ளது. இந்த விபத்தில் 5 இந்தியா்கள் உள்பட 35 வெளிநாட்டவா்கள் உயிாிழந்திருப்பதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடா்பாக சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது வரை 24 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

450 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மரபனா உடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேட்டறிந்தார்.

இந்நிலையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள சுஷ்மா, கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் அளித்த தகவலின்படி, மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் ஆவர்.

மேலும் தகவல்களுக்காக காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த பிஎஸ் ரஸீனா(58) என்ற பெண் துபாயில் செட்டில் ஆகிவிட்டார். அவரும் இலங்கை தாக்குதலில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பதிவிட்டுள்ள சுஷ்மா சுவராஜ், கொழும்புவில் பாதிப்புக்கு ஆளான இந்தியர்கள் இருந்தால், உடனே இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவோம் என்று உதவி எண்களையும் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக டுவிட்டரில் பதிவிட்டிருந்த பிரதமர் மோடி, இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் கடும் கண்டனத்திற்கு உரியது. இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடுவோருக்கு இங்கு இடமில்லை. இலங்கை மக்களுடன் இந்தியா உறுதுணையாக நிற்கும்.

உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி