ஆப்நகரம்

பெண்ணின் ஆடைகளை கிழித்தால் மரண தண்டனை : அரசு அதிரடி

பேருந்தில் பெண்ணின் ஆடைகளை கிழித்த 3 பேருக்கு கென்ய அரசு மரண தண்டனை கொடுத்துள்ளது.

TNN 21 Jul 2017, 9:09 pm
பேருந்தில் பெண்ணின் ஆடைகளை கிழித்த 3 பேருக்கு கென்ய அரசு மரண தண்டனை கொடுத்துள்ளது.
Samayam Tamil 3 youngsters teared the girl dress got hanging until death in kenya
பெண்ணின் ஆடைகளை கிழித்தால் மரண தண்டனை : அரசு அதிரடி


ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கடந்த 2014- இளம்பெண் ஒருவர் பேருந்தில் பயணம் செய்தபோது அவர் அருகில் 3 வாலிபர்கள் சென்றுள்ளனர். அந்த பெண்ணின் ஆடை மிக கவர்ச்சியாக இருப்பதாகவும், இப்படி ஆடை அணிந்தால் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளத்தான் தோன்றும் என்று அந்த மூன்று வாலிபர்களும் கூறியிருகின்றனர்.

இவ்வாறு இழிவாக பேசிவிட்டு அவளின் ஆடைகளை கிழித்து அவமதித்துள்ளனர். இச்சம்பவம் எல்லா நாடுகளுக்கும் பரவி, கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. எல்லா நாடுகளை சேர்ந்த மகளிர் அமைப்புகளும், பெண்களின் அடிப்படை உரிமைகளை காக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதன் பின் 3 வாலிபர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நேற்று நைரோபி நீதிமன்றத்தில் நேற்று பிறப்பிக்கப்பட்டது. பெண்ணின் அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் அவருடைய ஆடையை கிழித்து அவமதித்த 3 வாலிபர்களுக்கும் மரண தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். கென்யா நாட்டில் பெண்ணின் ஆடைகளை கிழித்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி