ஆப்நகரம்

எப்படியாவது ஊருக்கு கூட்டிட்டு போங்க: லண்டனில் தவிக்கும் 300 தமிழர்கள்

14 நாட்கள் தனிமைப்படுத்தினாலும் பரவாயில்லை. எப்படியாவது எங்களை கூட்டிச் செல்லுங்கள் என்று 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Samayam Tamil 27 May 2020, 12:34 pm
லண்டனில் சிக்கித்தவிக்கும் 300க்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப அரசின் ஒப்புதலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Samayam Tamil கோப்புப்படம்


இதுகுறித்து லண்டனில் முனைவர் பட்டம் படித்து ஆராய்ச்சி மாணவரான ஷியாமளா சுரேந்திரன் பேசும்போது, “நாங்கள் வீடுகளுக்குச் செல்ல தவித்து வருகிறோம். ஆனால், விமான சேவை நிறுத்தப்பட்டதால் இங்கு சிக்கித் தவிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

இங்கு 300க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இதே போல சிக்கித் தவிக்கின்றனர். அனைவரும் இணைந்து ”Tamils Starnded in UK” ஒரு வாட்சப் குழு உருவாக்கி உள்ளோம். பொது முடக்கம் காரணமாக யாரும் வெளியில் செல்லவும் முடியவில்லை. கடந்த மே 14ஆம் தேதி லண்டனிலிருந்து விமானத்தில் ஒரு தமிழர்கள் குழு சென்னை புறப்பட்டுச் சென்றது. அதற்குப்பிறகு இங்கிருந்து சென்னைக்கு எந்த விமானமும் இயக்கப்படுவதில்லை.

கோவிட்-19: ஆபத்தாகும் நிலைமை; உடனடி பொருளாதார உதவி - ராகுல் காந்தி கோரிக்கை!

சென்னை மட்டும்தான் என்று இல்லை. இந்தியாவின் எந்த நகரத்திற்காவது எங்களளை அழைத்து செல்லுங்கள். எங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தினாலும் சரி. அதன்பிறகு எங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

வந்தே பாரத் திட்டம் மூலம் மீட்கப்பட்டதாக சொல்லப்பட்டதும் அந்த முதல் விமானம் மட்டும்தான் என்று ஷியாமளா கூறிய தகவல்களிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

இதுபோல, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இன்னும் ஏராளமானோரைக் கருத்தில் கொண்டு அரசு ஆவண செய்ய வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையுமாக உள்ளது.

அடுத்த செய்தி