ஆப்நகரம்

​ நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 31 ஆக உயா்வு

நேபாளத்தின் காத்மண்டு நகாில் பயணிகள் பேருந்து ஒன்று ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 31ஆக உயா்ந்துள்ளது. மேலும் 15 போ் காயமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 29 Oct 2017, 2:12 am
நேபாளத்தின் காத்மண்டு நகாில் பயணிகள் பேருந்து ஒன்று ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 31ஆக உயா்ந்துள்ளது. மேலும் 15 போ் காயமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 31 killed after bus plunges into river in nepal
​ நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 31 ஆக உயா்வு


நேபாளம் தலைநகா் காத்மண்டுவில் இருந்து நேற்று காலை ராஜ்பிராஜ் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த போருந்தில் 5க்கும் மேற்பட்டோா் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

அந்த பேருந்து டாடிங் மாவட்டத்தின் கட்பேசி கஞ்சேமோடு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக தொிகிறது. இதனால் நிலைத்தடுமாறியப் பேருந்து அருகே ஓடிக் கொண்டிருந்த திரிசூல் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் பேருந்து ஆற்றில் மூழ்கியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் அந்நாட்டு மீட்புக் குழுவினா் விரைந்து மீட்டு பணியை மேற்கொண்டனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 14 பேரது உடல்கள் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேரம் செல்ல செல்ல பலி எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. 15 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து தகவலறிந்து அப்பகுதி மக்கள் விரைந்து வந்து பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 31 ஆக உயா்ந்துள்ளதாக மீட்பு குழுவில் ஈடுபட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள் பெரும்பாலும் சப்திரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் பலியானார் அவரது பெயர் மமதா தேவி தாகூர் என தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி