ஆப்நகரம்

எத்தியோப்பிய விமான விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 157 பேர் பலி

விபத்துக்கு ஆளான விமானத்தில் பயணித்த 157 பேரும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது. எத்தியோப்பிய பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Mar 2019, 1:41 am
காணாமால்போன எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 157 பேரும் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
Samayam Tamil 20190310-ethiopian-airlines


எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்திலிருந்து போயிங் 737 ரக விமானம் கென்யாவின் நைரோபி நகருக்கு காலை 8.30 மணிக்குப் புறப்பட்டது. அடுத்த 6 நிமிடங்களில் இந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்துவிட்டது.

இந்த விமானம் பிஷாப்டூ என்ற நகரத்தின் மேல் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது எனவும் விமானத்தைத் தேடும் பணியை மேற்கொண்டிருப்பதாகவும் விமான நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் விபத்துக்கு ஆளான விமானத்தில் பயணித்த 157 பேரும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது. எத்தியோப்பிய பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த விமானத்தில் 33 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்துள்ளனர். இவர்களில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர் என எத்தியோப்பியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


இது பற்றி ட்விட்டரில் பதிவிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், "வைத்யா பனகேஷ் பாஸ்கர், வைத்யா ஹன்சின் அனகேஷ், நுகவராப்பு மனிஷா மற்றும் ஷிகா கார்க் ஆகியோர் எத்தியோப்பிய விமான விபத்தில் பலியானதாக அந்நாட்டு தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது" எனக் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி