ஆப்நகரம்

சவுதி அரோபியாவில் 40 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மலைமுகடு கண்டுபிடிப்பு!

சவுதி அரோபியாவின் தலைநகரமான ரியாத்தில், 40ஆயிரம் ஆண்டுகள் பழமையான மலைமுகடை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Samayam Tamil 18 Sep 2018, 2:30 pm
சவுதி அரோபியாவின் தலைநகரமான ரியாத்தில், 40ஆயிரம் ஆண்டுகள் பழமையான மலைமுகடைதொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Samayam Tamil iii


கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி தொல்பொருள் ஆய்வை இணைந்து செயல்படுத்தும் ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா மற்றும் பிரான்ஸ் நாடுகள்கையெழுத்திட்டனர். அதன்படி சவுதி அரேபியா மற்றும் பிரான்ஸ் நாடு இணைந்து சவுதி அரேபியாவின் தலைநகரில் உள்ள அல் கர்ஜ் மலைப்பகுதியில் தொல்லியல் ஆய்வு செய்து வருகின்றனர்.


சவுதி அரேபியாவின் சுற்றுசூழல் துறையின் மேற்பார்வையில் இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆய்வில் கற்காலத்தை சேர்ந்த மலைமுகடை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மலைமுகடு முகடு 40,000 வருடங்களுக்கு பழமையானது என்றும், மேலும் இதே பகுதியில் 2 பில்லியன் ஆண்டு முதல் 10ஆயிரம் ஆண்டுகள் பழமையான மலைப்பகுதிகளும் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

சவுதி அரேபியாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் மன்னர் சுல்தான் பின் சல்மான் இந்த ஆய்வை வெகுவாக பாரட்டியுள்ளார். மேலும் இந்த மலைப்பகுதியை சுற்றுலாத்தளமாக மாற்றுவதின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி