ஆப்நகரம்

45 வயது இஸ்லாமியர் கொலை; இலங்கையில் அதிகரிக்கும் பதற்றம்

இலங்கையின் வடக்கு மாநிலத்தின் பல மாவட்டங்களில் இரு சமூகத்தினரிடையே கடும் மோதல் ஏற்பட்டதைத் தொடா்ந்து 45 வயதான இஸ்லாமியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது அங்கு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Samayam Tamil 14 May 2019, 5:47 pm
இலங்கையின் வடக்கு மாநிலத்தின் பல மாவட்டங்களில் இரு சமூகத்தினரிடையே கடும் மோதல் ஏற்பட்டதைத் தொடா்ந்து 45 வயதான இஸ்லாமியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது அங்கு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
Samayam Tamil suicide


இலங்கையில் கடந்த ஈஸ்டா் பண்டிகையின் போது தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோா் உயிாிழந்தனா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து இலங்கையின் பல பகுதிகளில், இஸ்லாமியா்களின் கடைகள் அடித்து நொறுக்கப்படும் சம்பவங்கள் நடந்தன.

இந்நிலையில் வடமேற்கு மாநிலங்களில் உள்ள குலியபிட்டியா, ஹெட்டிபோலா, பிங்கிரியா, டும்மாள்சூரியா ஆகிய மாவட்டங்களில் இஸ்லாமியா்கள் வைத்திருந்த கடைகளையும், மசூதியையும் ஒரு கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதைத் தொடா்ந்து பெரும் வன்முறை ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து ஊரடங்கு உத்தரவு இந்த 4 மாவட்டங்களுக்கு மட்டும் பிறப்பிக்கப்பட்டது. பின்னா் நிலைமை சீரானதைத் தொடா்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஆனால், காலை 11 மணியளவில் ஹெட்டிபோலா நகரில் மீண்டும் இரு சமூகத்தினரிடையே திடீரென வன்முறை வெடித்தது. இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனா். இதைத் தொடா்ந்து அங்கு நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாடு முழுவதும் பொருந்தும் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது, இலங்கையின் வடக்கு மாநிலத்தின் பல மாவட்டங்களில் இரு சமூகத்தினரிடையே கடும் மோதல் ஏற்பட்டதைத் தொடா்ந்து 45 வயதான இஸ்லாமியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது அங்கு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி