ஆப்நகரம்

துருக்கியில் கார் குண்டுவெடிப்பு; 48 பேர் காயம்

துருக்கி நாட்டில் கார் குண்டு வெடித்ததில், போலீஸ் அதிகாரிகள் உள்பட 48 பேர் படுகாயம் அடைந்தனர்.

TNN 12 Sep 2016, 6:26 pm
துருக்கி நாட்டில் கார் குண்டு வெடித்ததில், போலீஸ் அதிகாரிகள் உள்பட 48 பேர் படுகாயம் அடைந்தனர்.
Samayam Tamil 48 wounded in eastern turkey car bombing
துருக்கியில் கார் குண்டுவெடிப்பு; 48 பேர் காயம்


அந்நாட்டின் கிழக்கு எல்லையில் உள்ள வான் நகரின் சோதனைச்சாவடியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. பிகேகே எனப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி இத்தகைய தாக்குதல்களை தொடர்ந்து, நடத்திவருவதாக, துருக்கி அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், காயம் அடைந்த 48 பேரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், துருக்கி, சிரியா எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி