ஆப்நகரம்

செக்ஸ்-க்கு முயன்று பாட்டிலில் மாட்டிய ஆணுறுப்பை வெட்டி எடுத்த மருத்துவர்

பாட்டிலை செக்ஸ் டாய்ஸாக பயன்படுத்தி விபரீததில் ஈடுபட்ட 50 வயது நபருக்கு, மருத்துவர்கள் ஆணுறுப்பை வெட்டி எடுத்துள்ளனர்.

TNN 17 Oct 2016, 1:35 pm
ஹோண்டுரஸ்: பாட்டிலை செக்ஸ் டாய்ஸாக பயன்படுத்தி விபரீததில் ஈடுபட்ட 50 வயது நபருக்கு, மருத்துவர்கள் ஆணுறுப்பை வெட்டி எடுத்துள்ளனர்.
Samayam Tamil 50 year old sticks penis in bottle amuptated after it died decayed
செக்ஸ்-க்கு முயன்று பாட்டிலில் மாட்டிய ஆணுறுப்பை வெட்டி எடுத்த மருத்துவர்


ஹோண்டுரஸ் நாட்டின், டகுசிகல்பா என்ற இடத்தில் வசித்துவரும் 50 வயது நபருக்கு மனைவியோ, கேர்ள் பிரண்டோ கிடையாது. இதனால் அவரது செக்ஸ் தேவையை எவ்வாறு நிவர்த்தி செய்து கொள்வது என்று தெரியாமல் இருந்துள்ளார். இதையடுத்து, பாட்டிலின் திறந்த பகுதியை செக்ஸ் டாயாக பயன்படுத்தியுள்ளார்.

இந்த விபரீத செயலில் ஈடுபட்ட பொழுது அவரின் ஆணுறுப்பு அந்த பாட்டிலினுள் மாட்டிக் கொண்டது. அதை எடுக்க முடியாமலும், வெளியே சொல்ல முடியாமலும் 4 நாட்கள் தவித்து வந்தார். அவரின் ஆணுறுப்பு நிறம் மாறிவருவதும், உணர்வற்ற நிலைக்கு செல்வதை அறிந்த அவர் வேறு வழியில்லாமல் கடைசியாக மருத்துவமனைக்கு சென்றார்.

அந்த நபரை ஆய்வு செய்த மருத்துவர், அவரின் ஆணுறுப்பு இறந்து அழுகி போய்விட்டதாக தெரிவித்தார். உறுப்பை அகற்றியே தீர வேண்டும். இல்லையெனில் உயிருக்கு ஆபத்து என்றார்.
மருத்துவர் கூறுகையில், “இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடுவோர் அடுத்து செக்ஸில் ஈடுபடுவது கடினம். இவருக்கு சிறுநீரை வெளியேற்ற மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாட்டிலில் ஆணுறுப்பு அடைபட்டால் அடுத்த 4 மணி நேரத்தில் உறுப்பு நிறமாறி இறந்து விடும். இதனால் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடவேண்டாம்” என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி