ஆப்நகரம்

ஈரானில் சக்தி வாய்ந்த பூகம்பம்: 500க்கும் மேற்பட்டோர் படுகாயம்! 33 பேரின் நிலை கவலைக்கிடம்!

மேற்கு ஈரானில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

Samayam Tamil 26 Nov 2018, 9:31 am
மேற்கு ஈரானில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், 33க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
Samayam Tamil iran earthquake 2


ஈரானின் மேற்கு மாகாணத்தில் நேற்று இரவு 8.00 மணியளவில் சுமார் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது சுமார் 175 கிலோமீட்டர் சுற்றளவு வரையிலும், பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழம் வரையிலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெரிய கட்டங்கள, அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி, 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 33க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில். இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. கடந்தாண்டு இதே ஈரானில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தால் 600க்கும் மேற்பட்டோர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி