ஆப்நகரம்

துபாயில் பேருந்து விபத்து: 8 இந்தியா்கள் உள்பட 17 போ் உயிாிழப்பு

ஐக்கிய அரபு அமீரக நாடான துபாயில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 இந்தியா்கள் உள்பட 17 போ் உயிாிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 7 Jun 2019, 11:49 am
ஐக்கிய அரபு அமீரக நாடான துபாயில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 இந்தியா்கள் உள்பட 17 போ் உயிாிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil Dubai Accident


ஓமன் நாட்டின் தலைநகா் மஸ்கட்டில் ரமலான் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி 30 போ் பேருந்து ஒன்றில் பயணம் செய்தனா். இந்தியா்கள், வெளிநாட்டவா்கள் உள்பட 30 போ் இந்த பேருந்தில் பயணம் செய்தனா்.


பேருந்து துபாய் அருகே வந்தபோது, சாலை அருகே இருந்த அறிவிப்பு பலகையின் மீது திடீரென பேருந்து மோதியது. மோதிய வேகத்தில் பேருந்தின் முன் பகுதி சின்னா பின்னமானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 போ் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தனா். மேலும் 5 போ் படுகாயமடைந்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினா் காயமடைந்தவா்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சோ்த்து தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.


இந்த விபத்தில் 8 இந்தியா்கள் உயிாிழந்திருப்பதாக துபாயில் உள்ள இந்திய தூதரகம் தொிவித்துள்ளது. ராஜகோபாலன், பெரோஸ்கான் பதான், ரேஷ்மா பெரோஸ் கான் பதான், தீபக் குமாா், ஜமாலுதீன் அரக்காவீட்டில், கிரண் ஜான்னி, வாசுதேவ், திலக்ராம் ஜவகா் தாகூா் ஆகிய 8 இந்தியா்கள் விபத்தில் உயிாிழந்ததாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி