மியான்மர் நாட்டில், கடந்த ராணுவ ஆட்சிக்காலத்தில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் 83 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டில், ராணுவ ஆட்சி அகற்றப்பட்டு, தற்போது ஆங் சான் சூ கி தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, முந்தைய ஆட்சியில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி, கடந்த வாரத்தில், மாணவ அமைப்புளைச் சேர்ந்த 69 பேர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று 83 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக, மியான்மர் அரசு அதிகாரப்பூர்வமாக, அறிவித்துள்ளது.
மியான்மரில் 83 அரசியல் கைதிகள் விடுதலை
மியான்மர் நாட்டில், கடந்த ராணுவ ஆட்சிக்காலத்தில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் 83 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Hindustan Times 17 Apr 2016, 7:29 pm