ஆப்நகரம்

சீனா: மக்கள் கூட்டத்தில் புகுந்து 9 பேர் சராமாரியாக வெட்டிக் கொன்றவர் கைது!

சீனாவில் மக்கள் கூட்டத்தில் புகுந்த கொலையாளி ஒருவன் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 9 பேர் பலியாயினர்.

Samayam Tamil 13 Sep 2018, 6:42 am
சீனாவில் மக்கள் கூட்டத்தில் புகுந்த கொலையாளி ஒருவன் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 9 பேர் பலியாயினர்.
Samayam Tamil china-crime-afp


சீனாவில் உள்ள ஹூனான் மாகாணத்தில் நேற்று இரவு வேகமாக வந்த கார் ஒன்று மக்கள் கூட்டம் மீது மோதியது. கார் மோதிய வேகத்தில், அங்கிருந்த பலர் படுகாயமடைந்தனர். பின்னர், காரில் இருந்து இறங்கி வந்த ஒருவர், அங்கிருந்த மக்கள் மீது கத்தியால் சராமாரியாக குத்தினார். இதில், பலத்த காயமடைந்த சிலர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்,, சாமர்த்தியமாக கொலையாளியைப் பிடித்து அவனிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து சுற்றி வளைத்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த கொலையாளியின் பெயர் யாங் ஜான்யுனு் என்றும்ல அவர் இதற்கு முன்பு பல குற்ற வழக்குகளில சிக்கி சிறைத்தண்டனை பெற்றவர் என்பதும் தெரியவந்தது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்