ஆப்நகரம்

லிபியா அருகே மூழ்கிய படகு: 11 பாகிஸ்தானியர்கள் உள்பட 90 அகதிகள் உயிரிழந்த சோகம்!

அகதிகள் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில், 90 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 4 Feb 2018, 1:15 am
திரிபோலி: அகதிகள் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில், 90 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 90 migrants reported dead after boat capsizes off libya
லிபியா அருகே மூழ்கிய படகு: 11 பாகிஸ்தானியர்கள் உள்பட 90 அகதிகள் உயிரிழந்த சோகம்!


லிபியாவின் வடக்கு பகுதியிலிருந்து படகு ஒன்று, மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலி நோக்கி பயணித்தது. இந்நிலையில் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது. இதில் அனைவரும் கடலில் மூழ்கினர்.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரியின் பேச்சாளர் முகமது பாஷில், “லிபியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் விசாரித்து வருகின்றது. முதற்கட்ட தகவலின்படி, 11 பாகிஸ்தானியர்கள் உட்பட 90 அகதிகள் மூழ்கி உயிரிழந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2017ல், மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலியை அடைந்த 1,19,000 பேரில் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை 3,100. இதன்படி, புலம்பெயர்வோர்களின் பட்டியலில் 13 வது இடத்தில் இருந்த பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை, கடந்த 2018 ஜனவரி மாதத்தில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐரோப்பியாவை அடையும் துருக்கி மற்றும் கிரீஸ் வழியிலான வழக்கமான பாதைகள் மூடப்பட்டதாலும் அப்பாதைகள் கடும்பனியினால மிகவும் கடினமானதாக மாறியதாலும புலம்பெயரக் கூட பலர் லிபிய பாதைக்கு திருப்பிவிடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் லிபியாவின் சூழல் மோசமடைந்து வருவதால், அங்கிருக்கக்கூடிய பாகிஸ்தானின் தொழிலாளர்கள் இதுபோன்ற மோசமான வழிகளை தேர்ந்தெடுப்பதாக கருதப்படுகிறது.

90 Migrants Reported Dead After Boat Capsizes Off Libya.

அடுத்த செய்தி