ஆப்நகரம்

'சீனாவை நம்ப முடியாது’... கொந்தளிக்கும் கனடா

மனித உரிமை விவகாரத்தில் சீனாவை நம்ப முடியாது என பெரும்பாலான கனடா மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 30 Jun 2020, 6:15 pm
சீனாவுக்கு எதிராக பல தரப்புகளில் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பல மாதங்களாக சீனாவுக்கும், சீன நிறுவனங்களுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கெடுபிடி கொடுத்து வருகிறார். ஜூன் 15ஆம் தேதியன்று சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து இந்தியாவிலும் சீனாவுக்கு எதிரான குரல்கள் வலுப்பெற்றுள்ளன.
Samayam Tamil சீனா கனடா பிரச்சினை


ஏற்கெனவே சீனாவிலிருந்து வந்த சரக்குகள் இந்திய துறைமுகங்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. நேற்று 59 சீன ஆப்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென கனடாவில் ஆதரவு பெருகியுள்ளது. சீன பொருட்களை புறக்கணிப்பது குறித்து ஆங்கஸ் ரீத் நிறுவனம் பொதுமக்களிடன் கருத்துக் கணிப்பு நடத்தியது.

இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 81 விழுக்காட்டினர், “சீனாவுக்கு செய்தி அனுப்பும் வகையில் அதன் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர். கனடாவுக்கும், சீனாவுக்கும் இடையே இருக்கும் பதற்றம் மிக தீவிரமான பிரச்சினை என 91 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

சீனாவுடனான பிரச்சினையை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சரியாக கையாளுவதாக 37 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். அவர் பிரச்சினையை சரியாக கையாளவில்லை என 50 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் சீனாவை நம்ப முடியாது என 93 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

சீனாவை சேர்ந்த ஹுவே நிறுவனத்தின் அதிகாரியை 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கனடா கைது செய்தது. அவர் மீதான வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு கனடாவை சேர்ந்த இரண்டு பேரை சீனா கைது செய்து தன் பிடியில் வைத்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கசப்புத்தன்மை அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி