ஆப்நகரம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

டவாவோ நகருக்கு வடகிழக்கில் 26 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல்.

Samayam Tamil 29 Oct 2019, 1:19 pm

ஹைலைட்ஸ்:

  • மிண்டானாவோவை மையமாக கொண்டு 6.6 ரிக்டர் அளவில் சக்திமிக்க நிலநடுக்கம்.
  • கட்டிடங்களுக்கு வெளியிலேயே இருக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil jpg
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் 6.6 ரிக்டர் அளவில் சக்திமிக்க நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் மத்திய மிண்டானாவோவை மையமாக கொண்டு, செவ்வாய் காலையில் இந்த நில நடுக்கம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின்போது கட்டிடங்கள் குலுங்கியதை உணர்ந்து வீட்டுகள், பள்ளிகளில் இருந்தவர்கள் அவற்றிலிருந்து வெளியே ஓடி தப்பினர்.

காலை 9:04 மணி அளவில் டவாவோ நகருக்கு வடகிழக்கில் 26 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு நிறுவனம் (பிவோல்க்ஸ்) தெரிவித்துள்ளது.

உலகம் இனி பாதுகாப்பாக இருக்கும்: டொனால்ட் ட்ரம்ப்

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் கட்டிடங்களுக்கு வெளியிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இருப்பினும் அருகே உள்ள மாகாணங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் பூகம்பங்களை அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியது போன்ற புவியியல் அமைப்பில் உள்ளது. அது அமைந்துள்ள பகுதி பசிபிக் நெருப்பு வளையம் என அழைக்கப்படுகிறது.

ஏற்கெனவே அக்டோபர் 16ஆம் தேதி ஏற்பட்ட 6.4 ரிக்டர் நிலநடுக்கம் மத்திய மிண்டானாவோ உலுக்கியது. இதில் குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர்.

கழிப்பறையில் கேமரா வைத்து லைவ் வீடியோவை பார்த்த விமானி

அடுத்த செய்தி