ஆப்நகரம்

பரிசோதனை செய்யாமலேயே கொரோனா இல்லையென ரிப்போர்ட் கொடுத்த 'தாராள பிரபு' கைது!!

பரிசோதனை மேற்கொள்ளாமலேயே ஆறாயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா இல்லை (நெகட்டிவ்) என்று மருத்துவர் ஒருவர் அறிக்கை அளித்துள்ள சம்பவம் வங்கதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 17 Jul 2020, 4:40 pm
ஒட்டுமொத்த உலகையே உலுக்கியவரும் கொரோனா வைரசுக்கு வங்க தேசம் மட்டும் விதிவிலக்கா என்ன? அந்நாட்டில் இதுநாள்வரை சுமார் இரண்டு லட்சம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil corona test


இந்த நிலையில், அந்நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவருமான முகமது ஷஹீத், தனது மருத்துவமனைக்கு வருவோருக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளாமலேயே, அவர்களுக்கு கொரோனா இல்லை என்று நெகட்டிவ் ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக வெளியாகியுள்ளஅதிர்ச்சி தகவல் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தகவலையடுத்து, முகமது ஷஹீத்தின் மருத்துவமனையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு இதுநாள்வரை மொத்தம் 10 ஆயிரத்து 500 கொரோனா பரிசோதனைகள் மேற்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கின.

இந்தியரின் ரூ.1.5 கோடி பில்லை தள்ளுபடி செய்த துபாய் மருத்துவமனை!

மேலும் அந்த மருத்துவர், தமது மருத்துவமனையி்ல் கொரோனா பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளவதாகக் கூறி, பரிசோதனைக்கு வருவோரிடம் ஆயிரக்கணக்கில் பணம் பிடிங்கி வந்ததும் அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆனால், அவற்றில் 4,200 பரிசோதனைகள் மட்டுமே உண்மையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 6,000-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளாமலேயே அவர்களுக்கு கொரோனா இல்லை என்று சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

முதல் முயற்சியிலேயே ஆச்சரியம் - கொரோனா தடுப்பு மருந்தின் இறுதிக்கட்டத்தில் அமெரிக்கா!

இதையடுத்து தலைமறைவான மருத்துவர் முகமது ஷஹீத்தை, அந்த நாட்டு போலீசார், இந்திய -வங்கதேச எல்லையில் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

அடுத்த செய்தி