ஆப்நகரம்

பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ஆட்கடத்தல் மன்னன் இந்தோனேஷியாவில் கைது

இந்தோனேசியாவிலிருந்து பல நாடுகளுக்கு தொழிலாளர்களை கடத்திய ஆட்கடத்தல்காரர் கைது

Samayam Tamil 5 Nov 2018, 7:44 pm
தொழிலாளர்களை கடத்திச் சென்று மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்து வந்த 59 வயதான பிரபல ஆட்கடத்தல்காரர் சிப்ரியானஸ் கொபோங் இந்தோனேஷியாவின் கிழக்கு நுசா டென்கரா பகுதியில் கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil Indonesia
ஆட்கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட மோசடி நபர் கைது


இந்தோனேஷியா போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை வைத்து, தலைமறைவாக இருந்த குற்றவாளி சிப்ரியானஸ் கொபோங்கவை டென்கரா மாகாண தலைநகரான குபாங்கில் வைத்து அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.

நுசா டென்கரா மாகாணத்தில் நூற்றுக்கணக்கான மக்களை வெளிநாடுகளுக்கு கடத்தி சென்றதாக, இவர் மீது 2014ம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. அதில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து டென்கரா மாகாண நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அப்போது நடைபெற்ற விசாரணையில், மலேசியாவுக்கு சட்டவிரோதமாக அவர் ஆட்களை கடத்தி அனுப்பும் ஏஜெண்ட்டாக இருந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் நான்கு ஆண்டுகள் தேடுதலுக்கு பிறகு இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதி மற்றும் அமைதிக்கான சேவை மையத்தின் இயக்குனர் கோவா சோலா, குற்றவாளி சிப்ரியானஸ்கொபோங்ன் கைது செய்யப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளார். ஆண்டுதோறும் இந்தோனேஷியாவின் கிழக்கு நுசா டென்கராவிலிருந்து மலேசியாவுக்கு 2,000 த்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் கடத்தி செல்லப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 10 மாதங்களில் 90 பேரின் உடல் மலேசியாவிலிருந்து இம்மாகாணத்துக்கு வந்துள்ளதாக கூறுகிறார் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மரியா ஹிங்கி. இவர்கள் முறையான பதிவின்றி மலேசியா செல்ல முயன்றவர்கள் எனப்படுகின்றது.

கிழக்கு நுசா டென்கரா, இந்தோனேசியாவில் கிறிஸ்த்துவர்களை பெரும்பான்மையாக கொண்ட மாகாணமாக விளங்குகின்றது

அடுத்த செய்தி