ஆப்நகரம்

அணு ஆயுதப் போர் எந்த நேரத்திலும் வெடிக்கும் – வடகொரியா எச்சரிக்கை

அணு ஆயுதப் போர் எந்த நேரத்திலும் வெடிக்கும் என்று வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

TOI Contributor 17 Oct 2017, 4:45 pm
அணு ஆயுதப் போர் எந்த நேரத்திலும் வெடிக்கும் என்று வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil a nuclear war may break out any moment north korea
அணு ஆயுதப் போர் எந்த நேரத்திலும் வெடிக்கும் – வடகொரியா எச்சரிக்கை


இதுகுறித்து ஐநாவுக்கான வடகொரிய துணை தூதர் கிம் இன் ரியோங் வெளியிட்டுள்ள செய்தியில், ‘’எந்த நேரத்திலும் அணு ஆயுதப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் சுய பாதுகாப்புக்காக வடகொரியா அணு ஆயுதங்கள் வைத்துக் கொண்டு இருப்பதில் தவறில்லை. எதிரிகளை தாக்கி அழிக்கும் சக்தி கொண்ட அணு ஆயுதங்களை வடகொரியா வைத்துக் கொண்டுள்ளது.

அணு ஆயுதத்தில் வடகொரியா தன்னிறைவு பெற்றுள்ளது. அணு குண்டு, ஹைட்ரஜன் குண்டு, கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கி அழிக்கும் அணுகுண்டு என்று அனைத்து வகையிலான குண்டுகளை வடகொரியா தன்னிடத்தே கொண்டுள்ளது.

எங்களது எல்லைக்குள் ஒரு இஞ்ச் அமெரிக்கா நுழைந்தாலும் விட மாட்டோம். அவர்கள் உலகின் எந்த எல்லையில் இருந்தாலும் தாக்கி அழிப்போம். அமெரிக்காவின் முக்கிய இடங்களை தாக்கி அழிக்கும் வல்லமை வடகொரியாவிடம் உள்ளது.

விரோத மனப்பான்மை மற்றும் அணு ஆயுத மிரட்டல் ஆகியவற்றை அமெரிக்கா விட்டால்தான் அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு முன் வருவோம். அது வரைக்கும் அணு ஆயுதங்களை கைவிடுவது, கண்டம் விட்டு கண்டம் தாவி அழிக்கும் ராக்கெட்டுகளை கைவிட மாட்டோம்’’ என்றார்.

அமெரிக்காவை தூண்டும் விதமாக தொடர்ந்து வடகொரியா பேசி வருவது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான புகைச்சலை அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள செய்தியில், ‘’ஐநா விதித்துள்ள பொருளாதார தடைகளை முன்னிட்டு வடகொரியாவுடனான பொருளாதார, அறிவியல் என்று அனைத்து உறவுகளையும் ரஷ்ய முறித்துக் கொள்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக் கிழமை பகிரங்க மிரட்டல் விடுத்திருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சென், ‘’வடகொரியா மீது முதல் குண்டு போடும் வரை வடகொரிய சிக்கலுக்கு தீர்வு காண முடியாது’’ என்று தெரிவித்து இருந்தார்.

North Korea's deputy UN ambassador warned on Monday that the situation on the Korean peninsula "has reached the touch-and-go point and a nuclear war may break out any moment."

அடுத்த செய்தி