ஆப்நகரம்

அபிநந்தனை கடை விளம்பரத்துக்குப் பயன்படுத்திய பாக்., டீ கடைக்காரர்!

அபிநந்தன் படத்தை பாகிஸ்தான் டீக்கடை முதலாளி ஒருவர் கடை விளம்பரத்துக்குப் பயன்படுத்திக்கொண்டு உள்ளார்.

Samayam Tamil 13 Mar 2019, 3:57 pm
அபிநந்தன் படத்தை பாகிஸ்தான் டீக்கடை முதலாளி ஒருவர் கடை விளம்பரத்துக்குப் பயன்படுத்திக்கொண்டு உள்ளார்.
Samayam Tamil tea


அபிநந்தன் பாகிஸ்தான் ராணுத்தினரால் கைது செய்யப்பட்டபோது அவருக்கு தேனீர் வழங்கப்பட்டது. அதனைப் பருகியபடி அவர் ராணுவ வீரர்களில் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒரு பாக்., ராணுவ வீரர் தேனீர் எவ்வாறு உள்ளது எனக் கேட்க அதற்கு அபிநந்தன் தேனீர் மிக அருமையாக உள்ளது என்றார்.

இதேபோல இந்தியாவும் பாகிஸ்தானும் தேனீர் அருந்த வேண்டும் என பலர் இணையத்தில் கமெண்ட் பதிவிட்டனர். தற்போது பாக் டீ கடை முதலாளி ஒருவர் அபிநந்தன் தேனீர் பருகும் காட்சியை பிளக்ஸ் அடித்து தன் கடையில் ஒட்டியுள்ளார். எதிரிகளையும் நண்பர்களாக்கும் தேனீர் என்ற வாசகத்தை அதற்கு கீழ் உருதில் எழுதியுள்ளார். இது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அடுத்த செய்தி