ஆப்நகரம்

தாய் நாட்டு மக்களை காப்பாற்ற மனித வெடிகுண்டை கட்டிபிடித்து உயிர் தியாகம் செய்த போலீஸ்

ஆப்கானிஸ்தானில் தன் மக்களை காப்பாற்ற மனித வெடிகுண்டை கட்டிப்பிடித்து போலீஸார் ஒருவர் உயிர் தியாகம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 21 Nov 2017, 6:43 pm
ஆப்கானிஸ்தானில் தன் மக்களை காப்பாற்ற மனித வெடிகுண்டை கட்டிப்பிடித்து போலீஸார் ஒருவர் உயிர் தியாகம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil a policemans bear hug stops a suicide bomber from killing more
தாய் நாட்டு மக்களை காப்பாற்ற மனித வெடிகுண்டை கட்டிபிடித்து உயிர் தியாகம் செய்த போலீஸ்


போலீஸ் என்றால் எப்போதும் கோபமாக நடந்துகொள்ளுதல், மிடுக்காக செயல்படுதல் மட்டும் தான் என பலர் உள்ளனர். ஆனால் அதில் சில போலீஸார் கடமைக்காவும், மக்களுக்காகவும் மிகச்சிறப்பாக பணியாற்றுவதோடு, தேவை ஏற்பட்டால் தன் உயிரை கொடுக்கக் கூட தயங்காதவர்களாக உள்ளனர்.

ஆப்கானில் ஒரு தியாகி :
அப்படி ஆப்கானிஸ்தானில் பொது மக்கள், போலீஸ் அதிகாரிகள், பிரமுகர்கள் என கூடியிருந்த ஒரு கூட்டத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர் தான் 25 வயதாஅன் சையது பாஷம் பாட்ஷா.

தீவிர பாதுகாப்பையும் கடந்து ஒரு நபர் மட்டும் கூட்டத்தை நோக்கி ஓடி வந்துள்ளார். அவர் மீது சந்தேகமடைந்த சையது பாஷம் பாட்ஷா அவரை தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது தான் தெரிந்தது அவர் ஒரு மனித வெடிகுண்டு.

உடனே, கூட்டமான பகுதியை நோக்கி அந்த நபர் சென்று விடாதபடி அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு தடுத்தார். அப்போது அந்த மனித வெடிகுண்டு தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.

இந்த சம்பவத்தில் 7 போலீஸார் உட்பட 18 பேர் பலியாகினர். சையது பாஷம் பாட்ஷா மட்டும் மனித வெடிகுண்டை தடுக்காவிட்டால் மேலும் அதிமாக உயிர் பலி ஏற்பட்டிருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி