ஆப்நகரம்

தாய்லாந்தில் 15 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு

தாய்லாந்து நாட்டின் தென் பகுதி எல்லையில் ஒரே நேரத்தில் 15 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TOI Contributor 20 Apr 2017, 2:54 pm
தாய்லாந்து நாட்டின் தென் பகுதி எல்லையில் ஒரே நேரத்தில் 15 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Samayam Tamil a series of 15 grenade bomb and gun attacks rock southern thailand
தாய்லாந்தில் 15 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு


நேற்றிரவு 7 மணியளவில் நடந்த இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இருவர் பலியானதாகவும், மூவர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்த தொடர் வெடிகுண்டு அனைத்தும், கையெறி குண்டு மூலம் நடத்தப்பட்டுள்ளதாகவும், காவல்நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.





கடந்தாண்டு இதே போல் ஏப்ரல் 11 மற்றும் 12ம் தேதிகளில் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

அடுத்த செய்தி