ஆப்நகரம்

இலங்கையில் சந்தேகத்துக்குரிய சிரிய நபர் கைது

ஈஸ்டர் அன்று தேவாலயங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு 290 பேர் உயிரிழந்த சம்பவம் உலகையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய சிரிய குடிமகன் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 23 Apr 2019, 12:07 pm
ஈஸ்டர் அன்று தேவாலயங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு 290 பேர் உயிரிழந்த சம்பவம் உலகையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய சிரிய குடிமகன் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Samayam Tamil arrest


இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த சிரிய நபர் அதுகுறித்து விசாரித்துள்ளார். இதனால் இவர்மீது சந்தேகம் ஏற்பட, தற்போது அவர் கைதாகியுள்ளார்.

இவர் குறித்த விரிவான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தமிழக இஸ்லாமிய அமைப்பான தவ்ஹத் ஜமாத் மீதும் சந்தேகப் பார்வை உள்ளது. இவை அனைத்துமே யூகம்தான். இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி