ஆப்நகரம்

வேட்டிக்கட்டி விமானம் ஓட்டி அமெரிக்காவையே அலறடித்த தமிழன்.!

அமெரிக்காவில் பைலட்டாக பணி செய்யும், ஈழத் தமிழன் ஒருவர், வேட்டிக் கட்டித்தான் விமான ஓட்ட வருவேன், அமெரிக்காவையே அலறடித்துள்ளார்.

TNN 25 Oct 2017, 2:04 pm
அமெரிக்காவில் பைலட்டாக பணி செய்யும், ஈழத் தமிழன் ஒருவர், வேட்டிக் கட்டித்தான் விமான ஓட்ட வருவேன், அமெரிக்காவையே அலறடித்துள்ளார்.
Samayam Tamil a tamil pilot with traditional dress dhoti in america
வேட்டிக்கட்டி விமானம் ஓட்டி அமெரிக்காவையே அலறடித்த தமிழன்.!


அமெரிக்காவில் வாழும் ரவிகரண் ரணேந்திரன், ஒரு ஈழத் தமிழன். இவர் அகரன் என்ற ஏவுகணையை உருவாக்கியுள்ளார். இவரது தொடர் செயல்திட்டங்களின் முதல் படிநிலையாக அகரன் ஏவுகணை சோதனை நடப்பட்டது. ஏவுகணையின் உந்துசக்தி தொடர்பில், இவர் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இந்த ஏவுகணை மிகவும் வினைத்திறன் வாய்ந்ததாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பைலட் என்றாலே அவர்களுக்கென தனி சீருடை உண்டு. அதை தான் உடுத்த வேண்டும். இந்தியாவிலும் அப்படித்தான். அப்படியிருக்க இலங்கை தமிழர் ரவிகரன் ரணேந்திரன், தன்னுடைய பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்துகொண்டு தான் பணிக்கு வருவேன் என்று கேட்டிருக்கிறார். முதலில் அதற்கு மறுப்பு கிடைத்தது.

என்னுடைய பாரம்பரிய உடையை அணியக்கூடாது என்று நீங்கள் எப்படி மறுக்கலாம் என்று வாதிட்டு போராடி, அதில் வெற்றியும் பெற்று தற்போது வேஷ்டி அணிந்து தான் விமானம் ஓட்டுகிறார். அதோடு தமிழில் பேசும்போது வேறு எந்த மொழியையும் கலந்து பேசுவதில்லை. தன்னிடம் தமிழில் உரையாடுபவர்களிடம் அந்நிய மொழி பேச அவர் அனுமதிப்பதும் இல்லை.

தமிழ்நாட்டில் வாழும் மக்களே தமிழ் பேசக் கூச்சப்படும் போது, அமெரிக்காவில் வாழும் பச்சைத் தமிழன் ரவிகரண் ரணேந்திரன் தமிழர்களுக்கு ஒரு முன்மாதிரி தான்.

A Tamil pilot with traditional dress dhoti in america

அடுத்த செய்தி