ஆப்நகரம்

பச்சிளம் குழந்தையை அடுப்பில் போட்டு எரித்த தாய்

தான் பெற்ற பச்சிளம் குழந்தையை அடுப்பில் போட்டு தாயே எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 2 Feb 2017, 10:45 pm
தான் பெற்ற பச்சிளம் குழந்தையை அடுப்பில் போட்டு தாயே எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil a women killed her child
பச்சிளம் குழந்தையை அடுப்பில் போட்டு எரித்த தாய்


ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு தனியார் நிறுவத்தில் வேலை செய்து வந்தார். அவருடைய கணவர் மீடி தொழில் செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஏற்கெனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சில காலங்களுக்கு முன் அந்த பெண்ணுக்கு மேலும் ஒரு குழந்தை பிறந்தது.

நான்காவது குழந்தை பிறந்தது வேலை செய்யும் நிறுவனத்திற்கு தெரிந்தால் , வேலை போய் விடுமோ என்ற அச்சத்தில், தன் கணவர் மீன் பிடிக்க சென்ற நேரத்தில் அந்த பெண் தன்னுடைய பச்சிளம் குழந்தையை எரிந்து கொண்டிருந்த அடுப்பில் வீசி கொலை செய்துள்ளார்.

வேலைக்கு சென்று வீடு திரும்பிய கணவன் வந்து பார்த்த போது , குழந்தை அடுப்பில் போட்டு கொல்லப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். குழந்தையை கருகிய நிலையில் மீட்டெடுத்த கணவர் , அவரது மனைவியை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். போலீசார் அந்த பெண்ணை கைது செய்து, மனநலக்காப்பகத்தில் அனுமதித்துள்ளனர்.

அடுத்த செய்தி