ஆப்நகரம்

அமெரிக்க படையால் கொல்லப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதி

அஃப்கானிஸ்தான் மாநிலத்தில் இருந்து டெலெகிராம் செயலி மூலம் ஐஎஸ் தீவிரவாதி ஒருவன் செய்தி ஒன்றை வெளியிட்டான். அதில் அப்துல்லா என்ற கேரளாவைச் சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதி அமெரிக்க படையினரில் வெடிகுண்டுத் தாக்குதலால் கொல்லப்பட்டதாக அவன் தகவல் அளித்துள்ளான்.

Samayam Tamil 3 Jun 2019, 12:18 pm
அஃப்கானிஸ்தான் மாநிலத்தில் இருந்து டெலெகிராம் செயலி மூலம் ஐஎஸ் தீவிரவாதி ஒருவன் செய்தி ஒன்றை வெளியிட்டான். அதில் அப்துல்லா என்ற கேரளாவைச் சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதி அமெரிக்க படையினரில் வெடிகுண்டுத் தாக்குதலால் கொல்லப்பட்டதாக அவன் தகவல் அளித்துள்ளான்.
Samayam Tamil terrist


அப்துல்லா கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி. இவனது மனைவி ஆயிஷா. 2014ம் ஆண்டு அப்துல்லா ஐஎஸ் சர்வதேச பயங்கரவாத அமைப்பின் கொள்கைகள் மீது பற்று கொண்டான். 2016-ம் ஆண்டு தன்னோடு தன் மனைவி உட்பட 21 இஸ்லாமியர்களை சேர்ந்து அமைப்பு ஒன்றைத் தொடங்கினான். இந்த அமைப்பினர் 2016ம் ஆண்டு ஜூன் மாதம் கேரளாவில் இருந்து அஃப்கானிஸ்தான் சென்றது.

அங்கு தீவிரவாத பயிற்சி பெற்ற பின் முழுநேர தீவிரவாதி ஆகினான் அப்துல்லா. இந்நிலையில் அஃப்கானிஸ்தானின் மாநிலத்தில் இருந்து டெலெகிராம் செயலி மூலம் ஐஎஸ் தீவிரவாதி ஒருவன் செய்தி ஒன்றை வெளியிட்டான்.

அதில் அப்துல்லா என்ற கேரளாவைச் சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதி அமெரிக்க படையினரில் வெடிகுண்டுத் தாக்குதலால் கொல்லப்பட்டதாக அவன் தகவல் அளித்துள்ளான்.

அப்துல்லா போல பல இஸ்லாமிய இளைஞர்கள் தீவிரவாதிகளால் மன மாற்றம் செய்யப்பட்டு கேரளாவில் இருந்து அஃப்கானிஸ்தான் உள்ளிட்ட ஐஎஸ் அமைப்பு இயங்கும் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இது தொடர்ந்தால் உலகமே அழியும் நிலை உருவாகக் கூடும். இதனைத் தடுக்கவும் உலக சமாதானத்தை மேம்படுத்தவும் டிரம்ப், மோடி, புடின் உள்ளிட்ட தலைவர்கள் போராடி வருகின்றனர்.

அடுத்த செய்தி