ஆப்நகரம்

பாக்., பயங்கரவாத அமைப்பால் அவதியுறும் ஆப்கானிஸ்தான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு ஆப்கானிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல்போக்கு இருந்து வருகிறது.

Samayam Tamil 28 Mar 2019, 6:40 pm
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு ஆப்கானிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல்போக்கு இருந்து வருகிறது.
Samayam Tamil imran khan


இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு அமைந்தால் தான் தாலிபான்கள் உடனான அமைதி பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், உள்நாட்டு விவகாரங்களில் இம்ரான்கான் தலையிட கூடாது என ஆப்கானிஸ்தான் அரசு எச்சரித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்நாட்டு கலவரம் அதிகரித்து வருகிறது. செயல்படாத பொம்மை அதிபராகவே இம்ரான் திகழ்கிறார், ராணுவத்தினர் கையிலேயே ஆட்சி உள்ளது என்ற விமர்சனமும் தீவிரமடைகிறது.

தாலிபான்கள் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் அப்கானிஸ்தானுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் பயங்கரவாத இயக்கமாக உள்ளது. பாக்.,கின் அண்டை நாடுகள் பாக்.,கில் நிலவும் உள்நாட்டு பயங்கரவாதத்தால் அச்சுறுத்தப்பட்டு உள்ளன. புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் பாக்., பயங்கரவாத நாடாகவே உலக நாடுகளால் எண்ணப்படுகிறது.

அடுத்த செய்தி