ஆப்நகரம்

கஞ்சா டோர் டெலிவரி.. உபர் போடும் திட்டம்.. ரெடியாகும் சட்டம்!

கஞ்சாவை டோர் டெலிவரி செய்ய திட்டமிட்டு வருவதாக உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 13 Apr 2021, 7:40 pm

ஹைலைட்ஸ்:

  • கஞ்சா டோர் டெலிவரிக்கு திட்டம்
  • புயல் வேகத்தில் திட்டம் போடும் உபர் நிறுவனம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil marijuana
கொரோனா காலகட்டத்தில் கடைகள், வணிக மையங்களில் பொதுமக்கள் கூட்டம் போடுவது பாதுகாப்பானதல்ல. வழக்கமாக நுகர்பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டில் டெலிவர் செய்துவிடுவார்கள். எனினும், மதுப்பிரியர்கள் கோரிக்கையால் மதுபானங்களும் வீட்டுக்கு நேரடியாக டோர் டெலிவரி செய்யப்பட்டன.
கூட்டம் கூட்டமாக பாகிஸ்தான் போகும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்!
அமெரிக்காவில் உபர் நிறுவனம் மதுபானங்களை டோர் டெலிவரி செய்து வந்தது. இந்நிலையில், கஞ்சாவையும் நேரடியாக டோர் டெலிவரி செய்ய உபர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் சட்டரீதியாகவே கஞ்சாவை பயன்படுத்தலாம்.

இதுகுறித்து உபர் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி தாரா கோஸ்ரோஷஹி பேசியபோது, “கஞ்சா டெலிவரிக்கு அனுமதி கிடைத்தபின், பெடரல் சட்டங்கள் அமலுக்கு வந்தபின் நிச்சயமாக கஞ்சாவை டோர் டெலிவரி செய்யப்போகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் 16 மாகாணங்களில் கஞ்சாவை பயன்படுத்த சட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்க பெடரல் சட்டப்படி கஞ்சா பயன்பாடு இன்னும் சட்டவிரோதமாகவே இருக்கிறது. எனினும், இந்த கொள்கையை மாற்றுவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா போனா பணம் கொடுப்பாங்களா? அட இது தெரியாம போச்சே!
சில வாரங்களுக்கு முன் நியூ யார்க் மாகாணத்தில் கஞ்சாவை கேளிக்கைக்கு பயன்படுத்த சட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதுபோக கஞ்சா டெலிவரிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கலிபோர்னியா, நெவாடா, ஒரேகான் ஆகிய மாகாணங்களில் கஞ்சா டோர் டெலிவரிக்கு அனுமதி உள்ளது.

அடுத்த செய்தி