இந்தியாவைத் தொடர்ந்து சார்க் மாநாட்டில் பங்கேற்பது இல்லை என்று ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பூடான் அறிவித்துள்ளன. இதன் மூலம் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சார்க் தலைவருக்கு பூடான் மற்றும் வங்கதேச நாடுகள் அனுப்பி இருக்கும் கடித்ததில், ''எங்களது நாடுகளின் உள்விவகார விஷயங்களில் ஒரு நாடு தொடர்ந்து தலையிட்டு வருகிறது. இந்த நிலையில் நவம்பரில் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் 19வது சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதில் எந்த பலனும் இல்லை. அண்டை மாநில ஒத்துழைப்பு, தொடர்புகள் ஏற்படுத்துதல் ஆகியவற்றில் வங்கதேசம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆனால், அதற்கான சூழல் இல்லை. ஆதலால், இந்த மாநாட்டில் வங்கதேசம் கலந்து கொள்ளாது'' என்று தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானும் இதே காரணத்தை முன் வைத்துள்ளது. தீவிரவாதமே தாங்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாததற்கு காரணம் என்று பூடானும் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழல் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவில்லை. ஆதலால் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை என்று இந்தியா நேற்று தெரிவித்து இருந்த நிலையில் இன்று வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தானும் அறிவித்துள்ளன.
19வது சார்க் மாநாடு இஸ்லாமாபாத்தில் வரும் நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
After India Bangladesh, Afgan, Bhutan also not participating in the 19th SAARC Islamabad
இதுகுறித்து சார்க் தலைவருக்கு பூடான் மற்றும் வங்கதேச நாடுகள் அனுப்பி இருக்கும் கடித்ததில், ''எங்களது நாடுகளின் உள்விவகார விஷயங்களில் ஒரு நாடு தொடர்ந்து தலையிட்டு வருகிறது. இந்த நிலையில் நவம்பரில் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் 19வது சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதில் எந்த பலனும் இல்லை. அண்டை மாநில ஒத்துழைப்பு, தொடர்புகள் ஏற்படுத்துதல் ஆகியவற்றில் வங்கதேசம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆனால், அதற்கான சூழல் இல்லை. ஆதலால், இந்த மாநாட்டில் வங்கதேசம் கலந்து கொள்ளாது'' என்று தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானும் இதே காரணத்தை முன் வைத்துள்ளது. தீவிரவாதமே தாங்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாததற்கு காரணம் என்று பூடானும் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழல் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவில்லை. ஆதலால் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை என்று இந்தியா நேற்று தெரிவித்து இருந்த நிலையில் இன்று வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தானும் அறிவித்துள்ளன.
19வது சார்க் மாநாடு இஸ்லாமாபாத்தில் வரும் நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
After India Bangladesh, Afgan, Bhutan also not participating in the 19th SAARC Islamabad