ஆப்நகரம்

உலகின் மிகப்பெரிய ‘ஏர்லேண்டர் 10’ ஆகாய கப்பல் சோதனை வெற்றி

ஏர்லேண்டர் ஆகாய கப்பல் சோதனை லண்டனில் மீண்டும் நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது. அடுத்த கட்டமாக இதில் பயணிகளுன் பறப்பது குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது.

Samayam Tamil 16 Jan 2019, 2:44 am
இங்கிலாந்தில் உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
Samayam Tamil _105138073_airlanderinhangar1getty


இங்கிலாந்தை சேர்ந்த ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகமை ‘ஏர்லேண்டர் 10’ என்ற பெயரில் ஆகாய கப்பலைத் தயாரித்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய ஆகாயக் கப்பலாக உருவாக்கப்பட்டுள்ளன என அந்நிறுவனம் கூறுகிறது.

இது 92 மீட்டர் உயரமும், 44 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. இந்த ஆகாய கப்பல், கடந்த 2017ஆம் ஆண்டு பரிசோதிக்கப்பட்டது. அப்போது விபத்து ஏற்பட்டுவிட்டது. அந்த விபத்தில் ஒரு பெண் படுகாயம் அடைந்தார்.

இதனால் இந்த ஆகாயக் கப்பலின் அடுத்தக்கட்ட சோதனை கிடப்பில் போடப்பட்டது. பின் அந்த ஆகாய கப்பல், 25 மில்லியன் யூரோ செலவில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஏர்லேண்டர் ஆகாய கப்பல் சோதனை லண்டனில் மீண்டும் நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது. அடுத்த கட்டமாக இதில் பயணிகளுன் பறப்பது குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது என ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி