ஆப்நகரம்

போலி கொரோனா டெஸ்ட் முடிவுகளால் அதிர்ச்சி.. மக்களே உஷார்!

போலியான கொரோனா பரிசோதனை முடிவுகளால் அமேசான் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Feb 2021, 8:34 pm
அமேசான் நிறுவனத்தை சேர்ந்த சுமார் 4000 ஊழியர்களுக்கு தவறான கொரோனா பரிசோதனை முடிவுகள் அனுப்பப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 4000 பேரும் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அமேசான் வட்டாரத்தில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
Samayam Tamil almost 4000 amazon employees given fake covid results in uk
போலி கொரோனா டெஸ்ட் முடிவுகளால் அதிர்ச்சி.. மக்களே உஷார்!


தவறான பரிசோதனை முடிவுகள்

இங்கிலாந்தில் அமேசான் நிறுவனத்தை சேர்ந்த 4000 ஊழியர்களுக்கு போலியான கொரோனா பரிசோதனை முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவிட் டெஸ்ட்

அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பிசிஆர் சோதனை முறையை பயன்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு முதலாகவே அமேசான் இந்த பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது. பரிசோதனை முடிவுகளை தினசரி இங்கிலாந்து பொது சுகாதார துறைக்கு அனுப்பி வருகிறது.

​போலி சோதனை முடிவுகள்

அமேசானின் 3,853 ஊழியர்களுக்கு சில தினங்களுக்கு முன் வந்த மெசேஜில், அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை எனவும், அனுப்பப்பட்ட முடிவுகள் போலியானவை எனவும் தெரியவந்துள்ளது.

​அரசு விளக்கம்

தினசரி 700,000 பரிசோதனைகளை மேற்கொள்ளும் அளவுக்கு சுகாதார துறைக்கு திறன் இருப்பதாகவும், 800 பரிசோதனை மையங்கள் மற்றும் மொபைல் நிலையங்களில் ஏராளமானோர் பரிசோதனை மேற்கொள்வதாகவும், யாருக்கும் பிரச்சினை வந்ததில்லை எனவும் இங்கிலாந்து சுகாதார துறையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

​மற்ற நாடுகளில் நிலவரம்

கடந்த மாதம் கனடாவில் எட்மோண்டன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கொரோனா பரிசோதனை முடிவுகள் தவறாக அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, தவறான பரிசோதனை முடிவுகள் குறித்து அவர் எச்சரிக்கை எழுப்பினார்.

அடுத்த செய்தி