ஆப்நகரம்

சீனாவுக்கு ஆதரவாக செயல்படும் ட்ரம்ப்: அமெரிக்க முன்னாள் அதிகாரி பகிரங்க குற்றச்சாட்டு!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் மீண்டும் வெற்றிபெற வேண்டி, சீனாவின் உதவியை டொனால்டு ட்ரம்ப் நாடியுள்ளதாக, அந்நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 18 Jun 2020, 8:21 pm
அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்டன், 'ஒரு வெள்ளை மாளிகை நினைவுகள்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். இந்தப் புத்தகம் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
Samayam Tamil john


இந்த நிலையில், புத்தகத்தின் ஒரு பகுதி அமெரிக்காவின் பிரபல பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், " இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற, தனிப்பட்ட முறையில் தமக்கு உதவும்படி ஜி ஜின்பிங்கிடம் ட்ரம்ப் கேட்டு கொண்டுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"சீனாவில் உள்ள முஸ்லிம் இனத்தவரை பெருமளவில் தடுத்து வைப்பதற்காக முகாம்கள் அமைக்கப்படுவதாக ஜின்பிங் கூறியபோது, அதனை ட்ரம்ப் மனம் உவந்து வரவேற்றார்" என்றும் தமது புத்தகத்தில் ஜான் குறிப்பிட்டுள்ளார்.

அடேங்கப்பா... இந்திய நிறுவனங்களில் சீனா இவ்வளவு முதலீடா?

மேலும், 'தான் விரும்பிய சர்வாதிகாரிகளுக்கு தனிப்பட்ட உதவிகளை வழங்கவும், அவர்கள் மீதான குற்றவியல் விசாரணையை நிறுத்தவும் ட்ரம்ப் விரும்பினார்' என்றும் இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

தன் மீதான ஜான் போல்டனின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும், "அவர் ஒரு பொய்யர்" என்று ஒற்றை வாக்கியத்தில் ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு சபை தேர்தல்: களம் காணும் இந்தியா!!

மேலும் நாட்டின் ரகசியங்களை அம்பலப்படுத்துவதன் மூலம் தேசிய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவதாகக் கூறி, ஜான் போல்டனின் புத்தகத்துக்கு தடை கோரி, அமெரிக்க அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய -சீன எல்லைப் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தாம் தயாராக உள்ளதாக டரம்ப் தெரிவித்திருந்த நிலையில், அவரது செயல்பாடு சீனாவுக்கு ஆதரவாக உள்ளது போல், ஜான் போல்டன குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி