ஆப்நகரம்

இந்திய பெண்ணுக்கு அமெரிக்க குடியுரிமை... தன் கையால் அளித்த ட்ரம்ப்!!

இந்திய பெண் ஒருவருக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டின் குடியுரிமையை நேரில் வழங்கி கௌரவித்தார். வெள்ளை மாளிகையில் இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

Samayam Tamil 28 Aug 2020, 12:41 am
இந்தியா, லெபனான், கானா உள்ளிட்ட ஐந்து நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இந்தியாவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜீனியரான சுதா சுந்தரி நாராயணன் என்ற பெண்ணும் பங்கேற்றார்.
Samayam Tamil american citizen


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவருக்கு அமெரி்க்க குடியுரிமைக்கான சான்றிதழை வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட சுந்தரி நாராயணன், ட்ரம்ப் முன்னிலையில், அமெரிக்க குடிமகளாக உறுதியேற்றுக் கொண்டார். வெள்ளை மாளிகை வரலாற்றில் இதுவொரு அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.

நிகழ்ச்சியில் டிரம்ப் பேசும்போது, " இந்தியாவைச் சேர்ந்த சுதா சுந்தரி நாராயணன் மிகவும் திறமையான சாப்ட்வேர் இன்ஜினியர். .அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள அவர், தங்கள் நாட்டின் சட்டவிதிகளை பின்பற்றி நடக்க வேண்டும்" என்று டிரம்ப் கூறினார்.

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர்!!

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்களை கவருவதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் ஆகியோர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருவதுடன், பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி