ஆப்நகரம்

கொரோனோ நோயாளிகளுக்கு இப்படியொரு கொடுமை... ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாவோருக்கு கொடுமையான கனவுகள் வருவது அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 28 Sep 2020, 7:07 pm
இன்றைய நவீன மருத்துவ உலகில் இன்ஃபெக்ஷன் எனப்படும் நோய்த்தொற்று சாதாரண விஷயமாகிவிட்டது. சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு நோய்த்தொற்று ஆளாகி வருகின்றனர்.
Samayam Tamil corona dream


ஆனால், நோய்த்தொற்றின் காரணமாக அன்றாடம் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோய்க் கொண்டிருக்கும் கொடுமை தற்போதைய கொரோனா காலத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்றில் இருந்து ஒருவழியாக மீண்டு வருபவர்களில் பெரும்பாலோர் மனரீதியான பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் தடுப்பூசிக்கு வெற்றி - ஹேப்பி நியூஸ்!

அமெரிக்காவில் உள்ள மனநல மருத்துவர்கள் சங்கம், இதுதொடர்பாக சுமார் 3,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில், கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு இந்த நோய்த்தொற்று ஏற்படுவதற்கு முன்பிருந்ததைவிட மோசமான கனவுகள் வருவது தெரிய வந்துள்ளது.

பணம், சொத்துகளை இழப்பது. வேலையை இ்ழப்பது, சொந்தங்களால் கைவிடப்படுவது, உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படுவது போன்ற கொடுமையான கனவுகள் வருவது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் பெண் நோயாளிகளுக்கு இதுபோன்ற கனவுகள் அதிகம் வருவதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அடுத்த செய்தி