ஆப்நகரம்

நிலநடுக்கத்தை பார்வையிட சென்ற அமைச்சரின் ஹெலிகாப்டர் விழுந்து 13 பேர் பலி

மெக்சிகோவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புகளை பார்வையிட சென்ற அந்நாட்டின் உள்துறை அமைச்சர் நவரேட்டே சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், 13 பேர் உயரிழந்துள்ளனர்.

Samayam Tamil 18 Feb 2018, 7:06 am
மெக்சிகோவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புகளை பார்வையிட சென்ற அந்நாட்டின் உள்துறை அமைச்சர் நவரேட்டே சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், 13 பேர் உயரிழந்துள்ளனர்.
Samayam Tamil americas mexican helicopter crash 13 people killed
நிலநடுக்கத்தை பார்வையிட சென்ற அமைச்சரின் ஹெலிகாப்டர் விழுந்து 13 பேர் பலி


மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில், நேற்று முன்தினம் மாலை நேரத்தில், 7.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த விபத்தில் 369 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒக்சாக்கா மாநிலத்துக்கு, அந்நாட்டின் உள்துறை அமைச்சர் நவரேட்டே, ஒக்சாக்கா மாநில கவர்னர் அலேஜான்ட்ரோ முரட் ஆகியோர் தனி ஹெலிகாப்டரில் சென்றனர்.

அப்போது ஹெலிகாப்டர் தரையிறங்குகையில், எதிர்பாரத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 3 குழந்தைகள் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரழந்துள்ளனர்.

அடுத்த செய்தி