பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ஜெட் ஏர்வேஸ் பெண் ஊழியர் ஒருவர் காயம் அடைந்து இருப்பதாகவும், அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவீட் செய்துள்ளார். However, an Indian lady crew member of Jet Airways is injured. She has been rushed to the hospital: EAM Sushma Swaraj's tweet— ANI (@ANI_news) March 22, 2016 பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் விமான மற்றும் ரயில் நிலையங்களில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 13 பேர் பலியாகி, 35க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். Security tightened in Delhi Airport after security alert was issued following explosions in #Brussels pic.twitter.com/Vb2zqOzXg5— ANI (@ANI_news) March 22, 2016 இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த ஜெட் ஏர்வேஸ் பெண் ஊழியர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டுவீட் செய்துள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து, தில்லி, மும்பை விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து பிரஸ்ஸல்ஸ் செல்லும் விமானங்கள் அனைத்தும் அடுத்து நோட்டீஸ் அனுப்பப்படும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரஸ்ஸல்சில் இருந்து நியூவார்க், டோராண்டோ, தில்லி, மும்பை செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜெட் ஏர்வேசில் செல்ல 26ஆம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளளாம் என்று ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து, தில்லி, மும்பை விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து பிரஸ்ஸல்ஸ் செல்லும் விமானங்கள் அனைத்தும் அடுத்து நோட்டீஸ் அனுப்பப்படும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரஸ்ஸல்சில் இருந்து நியூவார்க், டோராண்டோ, தில்லி, மும்பை செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜெட் ஏர்வேசில் செல்ல 26ஆம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளளாம் என்று ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.