ஆப்நகரம்

'பசிக்கிது அம்மா'... மகளின் குரலை கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்...

தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமாவில் இருக்கும் பெண் ஒருவர் தனது மகளின் பசியை ஆற்ற தாய்ப்பால் கொடுத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 5 Dec 2019, 7:54 pm
அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண்மணி மரியா (36). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பாக விபத்தின் காரணமாக மரியாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Samayam Tamil பசிக்கிது அம்மா... மகளின் குரலை கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்...


அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் சுயநினைவை இழந்து கோமாவிற்கு சென்று விட்டார். அவர் நினைவு திரும்புவது கடினம் என தெரிவித்துள்ளனர். எனினும் தனது மனைவிக்கு அனைத்து சிகிச்சைகளும் வழங்கி முயற்சித்து பாருங்கள் என மரியாவின் கணவர் மருத்துவர்களிடம் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

முஷாரப்பின் தேச துரோக வழக்கில் டிசம்பர் 17ஆம் தேதி தீர்ப்பு

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரியாவின் 2 வயது பெண் குழந்தை அவருடைய அருகில் ஏக்கத்துடன் படுத்துள்ளது. அப்போது அந்த குழந்தை தனக்கு அதிகம் பசிக்கிறது என கோமாவில் உள்ள தாயிடம் கூறி அழுதுள்ளது.

அத்தருணத்தில் யாரும் எதிர்பாராதவாறு விழித்துக்கொண்ட மரியா தனது மகளுக்கு தாய் பால் கொடுத்துள்ளார். இத கண்ட அவரது கணவரும், மருத்துவர்களும் பெரும் ஆச்சரியத்தில் உறைந்தனர். ஆனால் மீண்டும் சற்று நேரத்தில் கோமாவிற்கு சென்று விட்டார் மரியா.

சூடான் ஆலையில் விபத்து: தமிழர்கள் உட்பட 18 பேர் பலி

இதனால் மரியா எப்படியும் மீண்டு வந்து விடுவார் என அவரது கணவரும், மகள்களும் நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அடுத்த செய்தி