ஆப்நகரம்

சிரிய அகதிகள் சென்ற பேருந்து மீது தாக்குதல்: 100 பேர் உடல்சிதறி பலி

சிரிய அகதிகள் சென்ற பேருந்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 100 பேர் பலியாகினர்.

TNN 16 Apr 2017, 10:07 am
பெய்ரூட்: சிரிய அகதிகள் சென்ற பேருந்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 100 பேர் பலியாகினர்.
Samayam Tamil at least 100 killed as blasts hit buses carrying evacuees in syria
சிரிய அகதிகள் சென்ற பேருந்து மீது தாக்குதல்: 100 பேர் உடல்சிதறி பலி


சிரியாவில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத், டமாஸ்கஸை தலைநகராக கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த மிதவாத எதிர்க்கட்சிகள் அலெப்போ நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். மேலும் ஐ.எஸ் அமைப்பினர் சிரியாவின் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். சிரிய அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் மற்றும் ரஷியாவின் படைகள் இணைந்து ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக போரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போர் நிறுத்த நடவடிக்கையின் படி, சண்டை நடைபெற்று வரும் இடங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றப்பட வேண்டும். அதற்கான கால அவகாசத்தின் போது, சண்டை நிறுத்தி வைக்கப்பட வேண்டும். இதற்கிடையில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போவில் இருந்து, பொதுமக்கள் பேருந்து ஒன்றில் வெளியேறிக் கொண்டிருந்தனர். ரஷிடின் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, காரில் வெடிகுண்டுகள் நிரப்பி, பேருந்து மீது மோதச் செய்தனர். அந்த குண்டுவெடிப்பில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

At least 100 killed as blasts hit buses carrying evacuees in Syria.

அடுத்த செய்தி