ஆப்நகரம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 20 போலீசார் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில், தலிபான் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், 20 போலீசார் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

TNN 21 May 2017, 10:25 pm
ஆப்கானிஸ்தான் நாட்டில், தலிபான் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், 20 போலீசார் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
Samayam Tamil at least 20 afghan police killed in taliban ambushes officials
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 20 போலீசார் பலி


அந்நாட்டில், கடந்த 2001ம் ஆண்டு முதலாக, நிலைகொண்டிருந்த அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. இதனால், தலிபான்கள் மீண்டும் செல்வாக்கு பெறத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதிகளில், தலிபான்கள் மிகவும் செல்வாக்கு பெற்று வருகிறார்கள்.

அவ்வப்போது, போலீஸ் முகாம்கள், பாதுகாப்புப் படையினர் முகாம்களை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் நடத்தி, ஆயுதங்களை கொள்ளையடித்துச் செல்வது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில், ஷாபுல் மாகாணத்தில் தலிபான்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தலிபான்களின் ஆதிக்கத்தை முறியடிக்க, போலீசார் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால், ஷா ஜோய் என்ற பகுதியில் நிகழ்ந்த மோதலில், 20 போலீசாரை தலிபான்கள் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். மேலும், 10 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர்.

தலிபான்களை தொடர்ந்து முன்னேற விடாமல் முயற்சித்து வருவதாக, ஆப்கானிஸ்தான் அரசு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

At least 20 Afghan policemen were killed in Taliban ambushes in south central Afghanistan, officials said on Sunday

அடுத்த செய்தி