பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நிகழ்ந்த இரு வேறு வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஈராக் நாட்டின் ஷாப் மாவட்டத்தில் உள்ள பிரபல சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த வெடிகுண்டு வெடித்ததில் சுமார் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர்.
அடுத்ததாக, சதர் நகரத்தில் வணிக வளாகங்கள் உள்ள பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்த வெடிகுண்டு வெடித்ததில் இருவர் பலியாயினர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த இருவேறு தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேநேரம், ஐஎஸ் தீவிரவாதிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஈராக் நாட்டின் ஷாப் மாவட்டத்தில் உள்ள பிரபல சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த வெடிகுண்டு வெடித்ததில் சுமார் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர்.
அடுத்ததாக, சதர் நகரத்தில் வணிக வளாகங்கள் உள்ள பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்த வெடிகுண்டு வெடித்ததில் இருவர் பலியாயினர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த இருவேறு தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேநேரம், ஐஎஸ் தீவிரவாதிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.