ஆப்நகரம்

ஆப்கன் அரசு அலுவலகம் அருகே தற்கொலைப்படை தாக்குதல்; 10க்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்கனில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் பலர் பலியாகினர்.

Samayam Tamil 15 Jul 2018, 8:19 pm
காபூல்: ஆப்கனில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் பலர் பலியாகினர்.
Samayam Tamil Afghan Blast


ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல், ஜலாலாபாத் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து, தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரத்தில் 3 மிகப்பெரிய வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்நிலையில் இன்று ஜலலாபாத்தில் கிராமப்புற மேம்பாடு அமைச்சக அலுவலகத்தை குறி வைத்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய நகர்ப்புற மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மைத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஃபிரைடூன் அஸந்த் கூறுகையில், தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட வந்த நபர், அமைச்சக வாயிலில் அதனை வெடிக்கச் செய்துள்ளார்.

அலுவலகம் முடிந்து ஊழியர்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது நிகழ்த்தப்பட்டுள்ளது. எனவே தீவிரவாதிகளின் குறி, எங்கள் ஊழியர்களே என்றார். காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஹஷ்மத் ஸ்டானெக்ஸை கூறுகையில், குண்டுவெடிப்பில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இதில் பாதுகாப்பு படையினரும், பொதுமக்களும் அடங்குவர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அலுவலக ஊழியர்கள் ஆகும்.

ஆப்கனில் நிகழ்த்தப்படும் தற்கொலைப் படை தாக்குதல்களின் எண்ணிக்கை நடப்பாண்டின் முதல் பாதியில் 22% அதிகரித்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

At least ten killed in suicide blast near Afghan ministry.

அடுத்த செய்தி