ஆப்நகரம்

தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சிக்கும் தமிழ் அகதிகள்..!

கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் முயற்சியினை அகதிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர்.ஆனால் அகதிகளை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

TNN 31 Jul 2016, 12:55 am
கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் முயற்சியினை அகதிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர்.ஆனால் அகதிகளை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
Samayam Tamil australia returns illegal immigrants
தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சிக்கும் தமிழ் அகதிகள்..!


இந்த வாரம்கூட கன்னியாகுமாரி மாவட்டத்தின் முட்டம் கடல் வழியே படகில் செல்ல முயற்சித்த பத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள படகில் 15 ஆயிரம் லிட்டர் டீசலுடன் படகு சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய தேர்தல் அகதிகள் சார்ந்த கொள்கையில் மாற்றத்தினை கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பு ஆளும் கட்சியே ஆட்சி பிடித்ததால் பொய்த்து போய் இருக்கிறது. இருந்த போதிலும் ஏதோயொரு சூழலின் மீதான நம்பிக்கையில் படகு வழியே செல்லும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.

தேர்தலுக்கு பின் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்,கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆட்கடத்தல்காரர்களின் திட்டம் எதுவும் வெற்றி பெறவில்லை என தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவை அடைய முயற்சித்த 28 படகுகளிலிருந்து 734 பேர் அந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவை அடையும் முயற்சிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டினால் எச்சரிக்கப்பட்டுள்ளது.


கடலை எதிர்கொண்டு ஆஸ்திரேலியாவை அடையும் அகதிகளின் முயற்சி வெற்றி பெற்றாலும் எந்த மனிதாபிமானமுமின்றி அந்த நாட்டிற்கே திருப்பு அனுப்பும் அவலத்தினை அகதிகள் எதிர்கொள்ள நேரிடும் என்பதே ஆஸ்திரேலியாவின் இப்போதைய அரசியல் நிலையாக உள்ளது.. சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் லிபரல் கட்சியே மீண்டும் வெற்றி பெற்றுள்ளதால் இந்த கொள்கையில் பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி