ஆப்நகரம்

வரலாற்றில் மகத்தான நிகழ்வு; அகதிகள் நிவாரணத்திற்கு $53m அளித்த ஆஸ்திரேலியா...!

அகதிகள் நிவாரணத்திற்கு 53 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

TNN 15 Jun 2017, 11:34 am
கான்பெர்ரா: அகதிகள் நிவாரணத்திற்கு 53 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil australia will pay 53 million to refugees
வரலாற்றில் மகத்தான நிகழ்வு; அகதிகள் நிவாரணத்திற்கு $53m அளித்த ஆஸ்திரேலியா...!


கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கடுமையான அகதிகள் கொள்கையினை ஆஸ்திரேலியா நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதில் 2013க்கு முன்வந்த அகதிகள் தொடர்ந்து தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டனர்.

இதில் 1,905 பேர், தாங்கள் மனுஸ் தீவு முகாமில் நவம்பர் 2012 முதல் டிசம்பர் 2014 வரையிலான காலத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது கடுமையான பாதிப்புகளுக்கும் திட்டமிடப்பட்ட துன்பங்களுக்கும் உள்ளானதாக குற்றச்சாட்டினை எழுப்பினர். இதையொட்டி ஆஸ்திரேலிய அரசின் மீதும் இம்முகாமினை நிர்வகித்த ஜி4எஸ் மற்றும் பிராட்ஸ்பெக்ட்ரம் என்ற இரு பாதுகாப்பு நிறுவனங்கள் மீதும் வழக்கினை பதிந்தனர்.

இந்த வழக்கு இன்று ஆஸ்திரேலியாவின் விக்டோரியா உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அரசும் அந்த இரு பாதுகாப்பு நிறுவனங்களும் 53 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் 300 கோடி ரூபாய்க்கும் மேல்) நிவாரணமாக கொடுக்க சம்மதித்துள்ளது. மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆஸ்திரேலிய இயக்குநர் எலைனி பியர்சன், இந்த நிவாரணத்தொகையினை மிகப்பெரும் வெற்றி என்றும் ஆஸ்திரேலிய அரசு இரு தடுப்பு முகாம்களையும் மூடி அவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

In rare victory, Australia will pay $53 million to refugees in abuse case.

அடுத்த செய்தி