ஆப்நகரம்

பணிப்பெண் அடித்ததால் 9 மாத குழந்தை இறப்பு

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணால் தாக்கப்பட்ட 9 மாதக் குழந்தை இறந்துள்ளது.

TNN 28 Jul 2016, 2:35 pm
ஷார்ஜா: சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணால் தாக்கப்பட்ட 9 மாதக் குழந்தை இறந்துள்ளது.
Samayam Tamil baby allegedly tortured by maid dies in hospital
பணிப்பெண் அடித்ததால் 9 மாத குழந்தை இறப்பு


அபுதாபியில் ராணுவத்தில் பணிபுரிகிறார் சலீம் அல் மாஸ்மி. அவரது 9 மாதக்குழந்தை சலாமா அல் மாஸ்மியை அவரது வீட்டுப் பணிப்பெண் தாக்கியதில் படுகாயமடைந்த்து.

கடந்த இரண்டு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த குழந்தை புதன்கிழமை இறந்துவிட்டது. குழந்தையின் தலையில் பலத்த அடிபட்டதால் கோமை நிலைக்குச் சென்றுவிட்டதாகவும் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவை நிறுத்த மேற்கொள்ளப்பட்ட அறுவைசிகிச்சை பலனளிக்காமல் குழந்தை இறந்ததாக சிகிச்சையளித்த மருத்தவர் சதீஷ் கிருஷ்ணன் கூறியுள்ளார்.

இறந்த குழந்தை இரட்டையர்களாக பிறந்ததாகவும் ஒரு குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இறந்துவிட்டதாகவும் குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர். மேலும், உடற்குறைபாடுடன் பிறந்த குழந்தை சலாமா ஏற்கெனவே மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருந்தாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், அந்நாட்டுக் காவல்துறையினர் அந்த வீட்டுப் பணிப்பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி