ஆப்நகரம்

அமெரிக்காவில் சுழன்று அடிக்கும் புயலின் நடுவே பிறந்த குழந்தை; ’ஹார்வே’ என பெயர்சூட்டல்...!

டெக்சாஸ் மாகாணத்தில் புயல் தாக்கிய போது பிறந்த குழந்தைக்கு ஹார்வே எனப் பெயரிடப்பட்டுள்ளது.

TNN 31 Aug 2017, 3:43 am
டெக்சாஸ்: டெக்சாஸ் மாகாணத்தில் புயல் தாக்கிய போது பிறந்த குழந்தைக்கு ஹார்வே எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Samayam Tamil baby harvey born in texas during hurricane harvey
அமெரிக்காவில் சுழன்று அடிக்கும் புயலின் நடுவே பிறந்த குழந்தை; ’ஹார்வே’ என பெயர்சூட்டல்...!


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 215கி.மீ வேகத்தில் ஹார்வே புயல் கரையை கடந்துள்ளது. இது 12 ஆண்டுகளுக்கு பின் ஏற்பட்ட கடுமையான பாதிப்பு என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒருவாரமாக பலத்த மழை பெய்து வருகிறது.

டெக்சாஸ் மாகாணம் முழுவதும் மூழ்கிக் காணப்படுகிறது. இந்நிலையில் புயலின் நடுவே மீட்கப்பட்ட இர்மா ரோட்ரிகியூஸுக்கு, கார்பஸ் கிறிஸ்டி மருத்துவமனையில் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தாயும், சேயும் நல்ல ஆரோக்கியமாக உள்ளனர். இதற்கிடையில் குழந்தைக்கு பெயர் சூட்டுவது தாயார் யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு ஹார்வே புயலின் நினைவாக, ஹார்வே என பெயர் வைக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

இதையடுத்து அக்குழந்தைக்கு ஹார்வே என பெயர் சூட்டப்பட்டது. புயலின் நடுவே குழந்தை பிறந்தது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்ததாகவும், மருத்துவமனைக்கு மிகுந்த நன்றி கடன்பட்டுள்ளதாகவும் ஹார்வேயின் தாயார் கூறியுள்ளார்.

Baby Harvey born in Texas during Hurricane Harvey.

அடுத்த செய்தி