ஆப்நகரம்

பாக்தாத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 7 பேர் பலி

ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் கடை வீதியில் நேற்று தற்கொலைப்படை தீவிரவாதி வெடித்து சிதறியதில் 7 பேர் உயிரிழந்தனர்.

TNN 26 Sep 2016, 1:40 am
ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் கடை வீதியில் நேற்று தற்கொலைப்படை தீவிரவாதி வெடித்து சிதறியதில் 7 பேர் உயிரிழந்தனர்.
Samayam Tamil baghdad human bomb attack
பாக்தாத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 7 பேர் பலி


பாக்தாத் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள இஸ்கானில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தையில் தீவிரவாதி ஒருவன் தனது உடலில் சக்திவாய்ந்த குண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு நுழைந்துள்ளான். அப்போது மக்கள் கூட்டம் குவிந்திருந்த சமயத்தில் தான் கட்டியிருந்த சக்திவாய்ந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளான்.

இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 28க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி