ஆப்நகரம்

டாக்கா தாக்குதல்:வங்கதேச அரசியல்வாதி மகனுக்கு தொடர்பு

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் அந்நாட்டின் அரசியல்வாதி ஒருவரின் மகனுக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.

TNN 5 Jul 2016, 2:33 am
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் அந்நாட்டின் அரசியல்வாதி ஒருவரின் மகனுக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
Samayam Tamil bangla politician son accused in dhaka terrorist attack
டாக்கா தாக்குதல்:வங்கதேச அரசியல்வாதி மகனுக்கு தொடர்பு


டாக்கா தாக்குதல் குறித்து வங்கதேச காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.அந்த இளைஞனின் பெயர் ரோஹன் என்பதும், அவன் வங்கதேச அரசியல் தலைவரான இமிதியாஸ் கான் என்பவரது மகன் என்பதும் தெரியவந்துள்ளது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இமிதியாஸ் கான்,தனது மகன் ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து வெளியேறியதாகவும்,அதிலிருந்து ரோஹனுடன் தாங்கள் எந்த விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.


இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களில் சிலர் சிறந்த கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. கடந்த வெள்ளியன்று டாக்காவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் உட்பட 20 வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.

அடுத்த செய்தி