ஆப்நகரம்

டாக்கா தீவிரவாத தாக்குதல்: தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

வங்கதேச தலைநகர் டாக்காவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட முக்கிய தீவிரவாதி உள்பட மூன்று பேரை அந்நாட்டு போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

TOI Contributor 27 Aug 2016, 3:49 pm
டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட முக்கிய தீவிரவாதி உள்பட மூன்று பேரை அந்நாட்டு போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
Samayam Tamil bangladesh cops storm militant hideout kill mastermind of dhaka cafe attack
டாக்கா தீவிரவாத தாக்குதல்: தீவிரவாதிகள் சுட்டுக்கொலை


வங்கதேச தலைநகர் டாக்காவில் இளம் வயது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் மீது குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல், உலகளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய தீவிரவாதிதமீம் அகமது சௌத்ரி (30) உள்பட மூன்று பேரை அந்நாட்டு போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த தகவலை அந்நாட்டு உள்துறை அமைச்சர் உறுதிபடுத்தியுள்ளார். அதேசமயம், கொலை செய்யப்பட்ட தீவிரவாதிகள் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்த தாக்குதலில் தொடர்புடையே தீவிரவாதிகள், மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களால் தீவிரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தொடர்ந்து, ஜாகிர் நாயக்கின் பீஸ் தொலைகாட்சியை வங்கதேச அரசு தடை செய்தது. மேலும், ஜாகிர் நாயக் எங்களது கண்காணிப்பு வளையத்தினுள் இருக்கிறார் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி