ஆப்நகரம்

தனித் தீவுக்கு கடத்தப்பட்ட முஸ்லிம்கள்: அரசு அட்ராசிட்டி!

ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் தொலைதூர தனித்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 4 Dec 2020, 10:26 pm

வங்கதேசத்தில் இருக்கும் 1500க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் தொலைதூர தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ரோஹிங்கியா அகதிகளை தீவுக்கு அனுப்பக்கூடாது என மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் வங்கதேச அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
Samayam Tamil கப்பலில் ஏற்றப்படும் ரோஹிங்கியாக்கள்


ஏழு கப்பல்களில் 1642 ரோஹிங்கியா அகதிகள் ஏற்றப்பட்டனர். சித்தகாங் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இக்கப்பல்கள் பாஷன் சார் என்ற தீவுக்கு சென்று அங்கு அகதிகளை இறக்கியுள்ளது. வங்கதேசத்தில் இருந்து 34 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த தீவு ஒரு காலத்தில் மழைநீரால் மூழ்கியிருந்தது.

கிறிஸ்துமஸ் கொண்டாடினால் அடிப்போம்: பஜ்ரங் தளம் மிரட்டல்!

வங்கதேசத்தின் 1.12 கோடி டாலர் செலவில் இத்தீவில் வெள்ள கட்டுப்பாட்டு அமைப்புகள், வீடுகள், மருத்துவமனைகள், மசூதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. தீவுக்கு சென்ற அகதிகளுக்கு மதிய உணவுக்கு அரிசி, முட்டை, கோழிக் கறி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக அகதிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டுள்ளது. கப்பலில் ஏறியபோது அனைத்து அகதிகளுக்கும் மாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

தீவுக்கு செல்லலாமா வேண்டாமா என்பதை சுதந்திரமாக முடிவெடுக்க அகதிகளுக்கு அனுமதியளிக்க வேண்டுமென வங்கதேசத்தை ஐநா வலியுறுத்தியுள்ளது. ஆனாலும், ஆயிரக்கணக்கில் அகதிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர். இந்த தீவுக்கு வெளிநாட்டு ஊடகங்கள் செல்ல அனுமதி கிடையாது.

அடுத்த செய்தி